Monday, November 4, 2019

கல்விக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

இஸ்லாத்தின் மூல வேத நூலான புனித மிகு அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டது. ஒன்றே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்குகின்றது. கல்வியை அரசியலை ஆய்வியலை வலியுறுத்தும் நூற்றுக்கணக்கான அல்குர்ஆன் வசனங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக அல்குர்ஆனின் 39:09, 17:85 27:52, 29:43, 35:28, 20:114ம் இலக்க வசனங்கள் அல்குர்ஆன் கல்விக்கு அறிவியலுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. அவ்வாறே எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

o "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)

o " ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)

o "மறுமையில் நபிமார்களும், அறிஞர்களும் எவ்வித வேறுபாடும் காணப்படாது. நபிமார்களுக்குரிய நபித்துவம் என்று அந்தஸ்தை தவிர" (ஹதீஸ்) இவ்வாறு அறிவின், அறிஞர்களின் சிறப்பை வலியுறுத்தும் நூற்றுக் கணக்கான நபி மொழிகள் பாபுல் இல்ம் என்ற ஹதீஸ் பிரிவில் காணப்படுகின்றன.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பின் கிலாபத் ஆட்சி செய்த நாற்பெரும் கலீபாக்களும், அதன் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உமையாக்கள், அப்பாஸிகள், உதுமானிய ஆட்சியாளர்கள் அனைவரும் இஸ்லாம் வலியுறுத்திய கல்விக்கு தமது அரசாங்க செயற்பாடு களினூ டாக உரிய அந்தஸ்தையும், கெளரவத்தையும் வழங்கி வந்தார்கள். முக்கியமாக முஸ்லிம்கள் அனைவ ருமே குர்ஆனை ஒதவும் விளங்கவும் செயற்படுத்தவும் தூண்டப்பட்டார்கள்.

அறிவையும் ஆய்வையும் மூல நோக்காகக் கொண்டு பல ஆய்வியல் அமைப்புக் கள் கலிபாக்களின் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டன. குறிப்பாக ‘தாருல் உலூம்’ (அறிவியல் கூடம்) தாருல் ஹிக்மா, பைதுல் ஹிக்மா என்பன போன்ற அறிவியல் சார்ந்த கல்வி நிலையங்கள் இவற்றில் மிக முக்கியமானவைகளாகும். இக்கல்வி நிறுவனங்கள், விவசாய, இரசாயனவியல், உயிரியல், புவிவியில், தர்க்கவியல்,கணக்கி யல், மருத்துவம், தத்துவவியல், மிருக வியல் போன்ற "உலூமுல் அக்லிய்யா" என்ற அனைத்து விஞ்ஞானத்துறை பாடங்களில் இலவசக் கல்வியை தொடர்ந்து வழங்கி வந்தன.

இஸ்லாமிய கல்விநிலையங்களுக்கும் (மத்ரஸாக்கள் தாராளமான நிதி வசதிகளையும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி, புலமைப் பரிசில் களையும் தொடர்ந்து வழங்கி வந்தன. இதன் காரணாக இஸ்லாமிய உலகம் அதன் பொற்காலம் என்ற அறிவியல், அரசியல், பொருளாதார, சமூக மேம் பாட்டு வளர்ச்சியைக் கண்டு உலகில் தன்னிகரில்லாத கெளரவத்தை உலக அரங்கில் பெற்றிருந்தது.

இஸ்லாத்தை உச்சநிலைக்கு கொண்டு வந்ததற்கு, இஸ்லாமும் கலிஃபாக்களும் முஸ்லிம் நாடுகளும் கல்விக்கும் ஆய்வியலுக்கும் கொடுத்த கெளரவமே காரணம் என நாம் கூறலாம். எப்போது கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாமிய உலகம் படிப்படியாக கைவிடத் தொடங்கியதோ அன்றிலிருந்தே முஸ்லிம் உலகின் அனைத்து துறைகளிலுமான பின்னேற்றம் ஆரம்பமாகிவிட்டதென பிரபல ஆய்வாளர் கலாநிதி உமர் சப்றா குறிப்பிடுகிறார்.

பிரித்தானியாவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பு பல ஆயிரம் ஆண்டுகள் பூர்வீகத்தை உடையதாகும். பிரபல வரலாற்று ஆய்வாளர் (கி. பி. 817) முகம்மது இப்னு மூஸா அல் கவ்ஸாமி தனது ‘சூறத்துல் அர்ழ்’ எனும் உலகப் படத்தில் ஐக்கிய இரா ச்சியத்திலுள்ள பல இடங்களைக் குறிப்பிட்டுக் காட்டுவதன் மூலம், அவர் போன்ற பல முஸ்லிம் ஆய்வா ளர்கள் இந்நாட்டுக்கு 9ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விஜயம் செய்துள்ளமை தெளிவாகின்றது.

அவ்வாறே ஐரோப்பிய நாடுகளுடன் முஸ்லிம்கள் கொண்டிருந்த தொடர்பை நிரூபிக்கும் பல வரலாற்றுத் தகவல்கள் எமக்கு இன்றும் கிடைக்கக் கூடியதாக உள்ளன. உதாரணமாக அங்லோ- செக்சன் மன்னர் ஒப்பா என்பவர் (கி. பி. 796இல் மரணம்) தனது நாட்டு நாணயக் குற்றியில் அல்லாவன்றி வேறு எந்த வணக் கத்துக்குரியவனும் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்ற இஸ்லாத்தின் மூலக மந்திரத்தை பொறித்து வெளி யிட்டதாக பேராசிரியர் றிச்சட்டேவெக்ஸ் குறிப்பிடுகிறார்.

மேலும் ஐக்கிய இராச்சிய மொழிகளில் கலந்துள்ள 600 க்கும் மேற்பட்ட அறபுச் சொற்களையும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஐக்கிய இராச்சியத்தில் முதலாவதாக (1477ல்) அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட கொக்டன் என்பவரது (THE DICTES AND SAYING OF THE PHILOSOPHER) என்ற நூல் அறபு நாட்டில் அறபு மொழியில் அபுல்வபா முபாஸிர் என்பவரால் ‘முக்தாருல் ஹிகம் வ மஹா ஸினுல் கலிம்’ என்ற நூலின் மொழி பெயர்ப்பே என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல ஆதாரங்கள் அறபு நாட்டு முஸ்லிம்களுடனான ஐக்கிய இராச்சியத்தின் தொடர்பை உறுதி செய்கின்றன.

இன்று பிரித்தானியாவில் 58.8 மில்லியன் மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 2 மில்லியன் மக்கள் முஸ்லிம்களாகும். இது மொத்த சனத் தொகையில் 3 வீதமாகும். பிரித்தானியா வில் வதியும் ஏனைய மத, இனத்தவரை விட முஸ்லிம்களின் இளைஞர் ஜனத் தொகை (1/3) (பதினாறு வயதிற்குட்பட்ட) மிக அதிகமானதாகும். 1500 பள்ளி வாயல்கள் ஐக்கிய ராச்சியத்தில் உள்ளன.

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களை பற்றிய நிச் சயமாக கணக்கெடுப்பு எம்மிடம் இல்லா விட்டாலும் சுமார் 3000 குடு ம்பங்களும், 15000க்கு மேற்பட்ட இல ங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழ் வதாக (நிச்சயமற்ற) தகவலொன்று கிடைத்துள்ளது.

இந்நாட்டில் இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்தே வசித்து வருகின்ற போதும் மிக அதிகமான குடிபெயர்வு 1975ம் ஆண்டிலிருந்தே ஆரம்பமாகியுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சாதாரண காரணங்களே இவ்வதிகரிப்புக்கு காரணமாகும்.

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து 2002ம் ஆண்டில் லண்டன்- ஹரோ நகரத்தில் நிர்மாணித்த மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாயிலும், கலாசார நிலை யமும் இலங்கை முஸ்லிம்கள் பரிணாம வளர்ச்சியையும் ஒரு ஒழுங்கமைப்புக்குள் இணைவதையும் காட்டுகின்றன.

இன்று பொதுவாக உலகில் மத சார்பான கல்வி முறைகளும், மதச்சார்பற்ற கல்வி முறைகளும் காணப்படுகின்றன. முஸ்லிம்களைப் பொறுத்தவரை இவ்விரண்டையும் இணைத்த கல்வி முறைமை ஒன்றே இஸ்லாத்தின் வழிகாட்டலும், இன்றைய அவசியத் தேவையுமாகும்.

பொதுவாக இன்றைய மேற்குலகக் கல்வி சட்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியாக வகுக்கப்பட்டுள்ளன. மேற்குலகக் கல்வியின் இன்றைய குறிக்கோள், தேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டுள்ளது. அது மதசார்பான, சமூக ஒழுக்கவியல் சார்பான எதையும் அக்கறையோடு நோக்குவதில்லை. சர்வதேச ரீதியாக கல்வியை இன்று விருத்தி செய்ய முற்பட்டுள்ள உலக வங்கியும இக்குறிக்கோளையே கல்விப்பணியில் அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை கல்வியில் நோக்கத்தை அது பின்வருமாறு வரையறுக்கின்றது.

1. ஒழுக்க மேம்பாடு

2. இஸ்லாமிய தனித்துவத்தை- தலைமைத்துவத்தை உருவாக்குதலும் விருத்தி செய்தலும்

3. எம்மைப் படைத்த வல்ல அல்லாஹ்வுக்கு பொறுப்புக் கூறல்.

அண்மையில் நடைபெற்ற உலக முஸ்லிம்களின் முதலாவது கல்வி மாநாடு கல்வியின் நோக்கம் பற்றிய மேற்கண்ட குறிக்கோள்களை உறுதிப்படுத் தியுள்ளன. எனவே இஸ்லாமியக் கல்வி என்பது அல்-குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டலில் இறைவனுக்கு மட்டும் அடிபணியும், நாம் இறைவனின் பிரதிநிதி (கலிஃபா) என்ற அடிப்படையில் நிறுவப்பட வேண்டும்.

பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்கள் மட்டுமன்றி அனைத்து நாட்டு முஸ்லிம்களும் பெரும்பாலானோர் தமது பிள்ளைகளின் கல்வியும், எதிர்காலமும் பற்றிய ஒரு நிச்சயமற்ற போக்கிலும் தடுமாற்றத்திலும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக அந்நியர்களின் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் தமது பெண் பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் பற்றி அவர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

இக்கல்விக் கூடங்களில் காணப்படும் ஒழுக்க சீர்கேடு, பாலியல் துஷ்பிரயோகம் சமய நம்பிக்கையின்மை, கலாசார பாதிப்புகளைப் பற்றி அவர்கள் அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று எமது பிள்ளைகள் எதிர்நோக்கும் பாடசாலை சவால்களாவன

1. குற்றம், துப்பாக்கி, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்கள்

2. போதைப் பொருள் பாவனையும் தடை செய்யப்பட்ட ஆண் பெண் உறவுகளும்

3. ஓரினச் சேர்க்கை

4. வறுமை

5. விவாகரத்து

6. குடும்ப பிளவுகளும், ஒரு பெற்றோர் குடும்பமும்

7. இளம்வயது கர்ப்பம் தரித்தல்

8. பாலியல் துஷ்பிரயோகம்

9. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்

எனவே ஒவ்வொரு இஸ்லாமிய பெற்றோரும் தமது பிள்ளைகளின் ஒளிமயமான எதிர் காலத்துக்காகவும், இஸ்லாமிய இலட்சியத்துடனான அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பின் வரும் விடயங்களை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. அதிகாலையில் சுபஹுத் தொழுகையோடு கண்விழித்து பிள்ளைகளைத் தொழப் பழக்குதல்.

2. செளகரியமான சந்தோஷமான குடும்ப வாழ்வுக்கு முயலல்.

3. பிள்ளைகளுக்கு வேண்டிய சகல வசதிகளையும், வாழ்க்கை அமைப்பையும் செய்து கொடுத்தல்.

4. நல்ல கல்வியை ஊட்டுதல்

5. தினமும் பிள்ளைகளோடு சேர்ந்து குர்ஆனை ஓதுதல், அவர்களோடு அதிகமாக காலத்தை செலவிடல்.

6. சிறந்த இஸ்லாமிய வழிகாட்டல் அமைந்த இலக்ரோனிக் சாதனங் களை ஏற்படுத்தி அவற்றை கண் காணித்தல்.

7. இஸ்லாமிய உரைகளை, நிகழ்ச் சியை பார்க்கும், கேட்கும் வசதிகளை செய்து கொடுத்தல்.

இவ்வாறான பல முயற்சிகளை இங்குள்ள பெற்றோர்கள் உடனடியாக மேற்கொள்ளாவிடில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதே. நீங்களும் இறைவனிடத்தில் மறுமையில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

தொகுப்பு எஸ்.எம். பதியுதீன் (எம்.ஏ) லண்டன்


Tuesday, May 17, 2016

அன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக்கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன், அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்க முடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.
ஆர்வமுடன் அதை கேட்ட மன்னன், அவனுக்கு நன்றி கூறி அதை வாங்கி குடித்தான். ஒரு வாய் குடித்தவன் சற்று நிறுத்த அந்த இளைஞன் ஆர்வமுடன் அவரது ரீயாக்ஷனை கவனித்துக்கொண்டிருந்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.
இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.
“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தியதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.
இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.
அவன் சென்ற பிறகு, ராணி அரசனை கோபித்துக்கொள்கிறாள்.
“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? நான் கேட்க கேட்க காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்தம் நீரையும் குடித்துவிட்டீர்களே…”
“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”
அரசன் சொல்ல, அந்த தோல் பையை எடுத்து பார்க்கிறாள். ஆம்… அதில் இன்னும் கொஞ்சம் நீர் இருக்கிறது.
ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.
“இந்த தண்ணீரையா நீங்கள் உலகிலேயே சிறந்த நீர் என்று மெச்சிக்கொண்டீர்கள்? என்ன ஆயிற்று உங்களுக்கு??”
“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது. அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம் வேதனைப்பட்டிருக்கும். அன்பைவிட சுவையானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு தெரியும் என்பதால் தான் நானே முழு நீரையும் குடித்தேன்” என்று விளக்கமளிக்கிறான்.
ராணி வெட்கி தலை குனிகிறாள்.
நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!
அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் வாழ்ந்தால் அதுவே பெரிய புண்ணியம்தான். மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும். இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். அதுவே உண்மையான நன்றி.
அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள். யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம.

நன்றி-சித்தார் கோட்டை.காம்

Monday, May 16, 2016

ரமழானின் நோக்கத்தை முஸ்லிம்கள் நிறைவேற்றுவார்களா?

இம்தியாஸ் யூசுப் ஸலபி-
விசுவாசிகளே! நீங்கள் இறையச்சம் (தக்வா) உடையவர்களாக திகழ்வதற் காக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டவாரே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட் டுள்ளது. (அல்குர்ஆன் 2:183)
முஸ்லிம் மக்களை பக்குவப்படுத்தி நல்லொழுக்கமுள்ளவர்களாக அல்லாஹ் வை பயந்து நடக்கக் கூடியவர்களாக மாற்றுவதே நோன்பின் பிரதான நோக்கமாகும். தவிர காலையிலிருந்து மாலைவரை பசித்திருந்து தாகித்திருந்து வீணாக நேரத்தைப் போக்குவது நோன்பின் நோக்கமல்ல.
சஹர் செய்ததிலிருந்து நோன்பு திறக்கும் வரை சாப்பிடக்கூடாது, பருகக்கூடாது, மனைவியிடம் உறவு கொள்ளக்கூடாது போன்ற ஆகுமாக்கப் பட்ட சில காரியங்கள் தடுக்கப்படுகின்றன. தனக்கு உரிமையான இக்காரியங்களை அல்லாஹ்வுக்காக விட்டு விட்டு தியாகம் செய்ய முன்வருபவன் அடுத்தவனுடைய சொத்துக்களை அபகரிக்க மாட்டான், கொள்ளையடிக்க மாட்டான், மானக் கேடான, பாவமான காரியங்களில், ஈடுபட மாட்டான். மோசடி செய்ய துணிய மாட்டான். இத்தகைய பயிற்சியை வழங்கு வது தான் நோன்பின் அடிப்படை நோக்கம். இந்தப் பயிற்சியை பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இவனுக்கு அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் கிடையாது.
நோன்பு வைத்திருக்கும் போது பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் எவர் விட்டுவிட வில்லையோ அவர் தாகித்திருப்பதனாலும், பசித்திருப்பதனாலும் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி)
ஆன்மீக ரீதியில் மக்களை பண்படுத்தி பக்குவப்படுத்தி உண்மையாளர்களாக, வாய்மையுள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் பெரும் இலட்சியப் பயணத்தின் பயிற்சிப் பாசரையாக இருப்பது தான் ஒரு மாத கால நோன்பு! ஒவ்வொரு வணக்க வழி பாடுகளும் (இபாதத்களும்) இந்தப் பயிற்சி யைத் தான் எங்களுக்கு வழங்குகிறது.
நோன்பு உங்களை தீமைகளிலிருந்து தடுக்கும் ஒரு கேடயமாகும். என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே உங்களில் எவரும் நோன்பு பிடித்திருக்கும் போது கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். வீண் கூச்சல் போட வேண்டாம் எவரேனும் ஏசி னால் அல்லது சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளியாக இருக்கிறேன். (என்னுடன் பிரச்சினைப்படாதே) என்று கூறட்டும். அல்லாஹ்வின் மீது சத்திய மாக, நோன் பாளியின் வாயிலிருந்து வெளிப்படும் மணம் அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி.
வாயை திறந்தால் தூசனம் பேசுபவர் களுக்கு, கெட்டவார்த்தைகளை பயன் படுத்துபவர்களுக்கு, வீண் கூச்சல் போடு பவர்களுக்கு, தொலைக்காட்சி (வுஏ), சினிமாவில் மோகம் கொண்டவர்களுக்கு அதனை விட்டும் தூரமாகி தங்களுடைய நடத்தைகளை சீர் செய்து, நல்ல பண்பாடு களை வளர்த்துக் கொள்வதற்கு நோன்பு ஒர் அரிய சந்தர்ப்பம்.
வீண் பேச்சுக்களில் சண்டை சச்சரவு களில் ஈடுபடாமல் நோன்பாளிகளுக்கு தொல்லை கொடுக்காமல் இரவு நேரங் களில் அரட்டையடிக்காமல், பாதைகளில் விளையாட்டுகளில் ஈடுபடாமல் அடுத்தவர் களுக்குக் கஷ்டத்தை கொடுக்காமல் வாழப் பழகிக்கொள்ள பயிற்சிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம்களைப் பற்றி மாற்று மத நண்பர்களிடத்தில் தப்பான எண்ணங்கள் உருவாகாத முறையில் நடந்து கொள்ளும் அதேவேளை நோன்பின் மாண்புகளை புரிவைக்கும் செயல்பாடுகளை காண்பிக்க வேண்டும்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுவும் ஓர் அரிய சந்தர்ப்பம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆத்மீக லௌகீக வாழ்வின் அர்த்தங்களை புரிய வைத்து செயல்படுத்தவைப்பதைத் தான் இந்த ரமழான் எங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. இந்த நோக்கத்தை புரியாமல் இந்தப் பயிற்சிகளை பெறாமல் ஒருவர் நோன்பு நோற்பதால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.
நன்றி-இஸ்லாம்கல்வி.காம்

Wednesday, June 3, 2015

பர்மா மியன்மார்

அஸ்ஸலாமு அலைக்கும்
வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
#****★*****★*****★*****★*****★*****#
பர்மா மியன்மார் ஓர் பாரவை

What is Burma / Miyanmar?
பர்மா தற்போது மியான்மர் என அழைக்கப்படும் இந்த தேசம் இந்தியா, வங்தேசம், சீனா, தாய்லாந்து, லாவொஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கரைகளில் அமைந்துள்ள மிகவும் இயற்கை வளம் மிக்க நாடு. இருந்த போதிலும் நிலையான அரசியல் சூழலின்மையாலும் உள்நாட்டு போர்களாலும் உலக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவே விளங்குகிறது.

பர்மா மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில் உள்ளது. மனித உரிமை மீறல்கள், குழந்தை தொழிலாளர்கள், ஆள்கடத்தல், பேச்சுரிமையின்மை ஆகியவற்றில் உலகளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சுமார் 130 இன மக்கள் பர்மாவில் வாழ்கின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையினர் பௌத்தர்கள். முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பழங்குடியினர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.
பர்மாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதனுடைய 6 கோடி மக்கள் தொகையில் 4% சதவிகிதம் என பௌத்தர்களால் சூழப்பட்டுள்ள பர்மா அரசு கூறினாலும் பர்மாவில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதால் 10% அளவிற்கு முஸ்லிம்கள் வாழக்கூடும் என்று பிற அரசு சாரா அமைப்புகள் கூறுகின்றன. இதில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழக்கூடியது பர்மாவின் வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள ராக்கினே மாகாணம். இது அராகன் மாகாணம் எனவும் அழைக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளுக்கிடையில், அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு அகதிகளை விட மோசமான நிலையில் பர்மாவின் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது. எல்லாவற்றையும் விட மோசமாக பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இல்லாத காரணத்தால் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்கள் நடத்தும் வன்முறைகள் உலக மக்களின் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படாமலேயே இருந்துள்ளது.

புத்த மதம் சாந்தி, சமாதானம், அஹிம்சை ஆகியவற்றிற்கு பெருமை பெற்றது என்பது தான் உலக மக்கள் அறிந்து வைத்திருப்பது. ஆனால் இந்த புத்த பிட்சுக்களின் வெறியாட்டம் ஆயிரக்காணக்க முஸ்லிம்களையும், பழங்குடியினரையும் அழித்திருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பெளத்தர்களின் மதவெறித் தன்மையை நாம் உணர்ந்தது ஏதோ இலங்கையில் தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது தான். ஆனால், இஸ்லாம் பர்மாவில் வந்தேறிய காலம் முதலாகவே உணவிற்காக கூட ஒரு உயிரினத்தை கொல்ல தயங்கும் பௌத்தர்கள் தன்னுடைய மத வெறித் தன்மையினால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்துள்ளனர்.
இணையதளத்தின் ஆளுமையினால், அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்களால் நடத்தப்பட்ட ஜூன் 2012 ராக்கினே மாகான கலவரங்கள் உலக மக்களின் பார்வையில், முஸ்லிம்கள் பர்மாவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சிறிதளவு உணர வைத்துள்ளது. பர்மாவில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் நடந்துகொண்டிருக்கும் போதிலும் நம்மில் பலரின் செவியில் முதல் முறையாக விழுந்திருக்கக் கூடியது ஜூன் மாதம் நடைபெற்ற ராக்கினே மாகாண கலவரமாகத் தான் இருக்கக் முடியும்.

இஸ்லாம் பர்மாவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னதாக நுழைந்தது. அன்றிலிருந்து இன்று வரை பல மன்னர்கள், பல சாம்ராஜ்ஜியங்கள், ஆங்கிலேயர்களின் காலணியாதிக்கம், ஜனநாயகம், இராணுவ ஆட்சி என பல்வேறு முறைகளில் பல்வேறு மக்களின் ஆதிக்கத்தில் பர்மா இருந்துகொண்டு வருகிறது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்திருந்தாலும், எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் ஆண்டிருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை அகதிகளைப் போலத் தான் பர்மா முஸ்லிம்களின் நிலை உள்ளது. முஸ்லிம்களின் நிலையையும், முஸ்லிம்களுக்கு எதிராக பர்மாவில் காலங்காலமாக நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது இக்கட்டுரை.

பர்மாவின் முதல் முஸ்லிமும், இஸ்லாத்தின் வருகையும்
அல்லாஹ்வின் பாதையில் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதற்கு நபித் தோழர்கள் பல கண்டங்கள், பல கடல்கள் தாண்டி சென்றனர். அதன் தொடர்ச்சியாக பர்மா மக்களிடையே இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக வந்திறங்கியவர் முஹம்மது இப்னு அல் ஹனஃபிய்யா. இவர் ஹிஜ்ரி 60ஆம் ஆண்டு (கி.பி.680) பர்மாவின் முதல் முஸ்லிமாக அந்நாட்டின் வங்காள விரிகுடாவின் கரைகளில் தனது காலடியை எடுத்து வைத்தார். இவரைத் தொடர்ந்து துருக்கி, பாரசீகம், அரேபிய தீபகற்பம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் வணிகர்களாகவும் மாலுமிகளாகவும் வரத் தொடங்கினர்.
அரசர் அனவ்ரஹாதா, கி.பி 1055ல் பர்மாவின் முதல் பேரரசை நிறுவுவதற்கு முன்னதாகவே முஸ்லிம்கள் பர்மாவின் முக்கிய வணிகங்களில் பங்கேற்று அங்கு குடியேறத் தொடங்கினர்.

முஸ்லிம்களின் வருகையாலும் அவர்களின் தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொண்டதாலும் பல பூர்வீக பர்மா மக்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

கி.பி 9 ஆம் நூற்றாண்டில் சீனாவை தேடி நிலத்தின் வழியாக வந்த பாரசீகர்கள் பர்மாவின் வடக்கு எல்லை மூலமாக இங்கு குடியேற தொடங்கினர். சீன முஸ்லிம்களை பாந்தேயர்கள் (கச்ணtடச்தூண்) என்றும் பூர்வீக பர்மாவின் முஸ்லிம்களை பாதியர்கள் (கச்tடடிண்) என்றும் அழைத்தனர். அதுமட்டுமல்லாமல் அங்குள்ள பூர்வீக மக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலமாகவும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாகவே முஸ்லிம்கள் பர்மாவோடும் அதன் மக்களோடும் ஒன்றோடு ஒன்றாக கலந்து விட்டனர்.
புத்த சாம்ராஜ்ஜியங்களில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளின் தொடக்கம்
பர்மாவின் முதல் புத்த சாம்ராஜ்ஜியம் 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதில் முதலில் உருவானது பாகன் சாம்ராஜ்ஜியம். புத்த சாம்ராஜ்ஜியங்களின் துவக்கத்திற்கு பிறகு தான் புத்த பிட்சுகளின் மதவெறியாட்டமும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் தொடங்கின. மன்னான் யசாவின் (Hmannan Yazawin) எனப்படும் பர்மாவின் அரசர்கள் பற்றிய வரலாற்று குறிப்பேட்டில் முதல்முறையாக புத்த சாம்ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் வருகையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்குறிப்பேட்டின்படி கி.பி. 1055ஆம் ஆண்டு பயாத் குடும்பத்தை சார்ந்த பயாத் வி, பயாத் தா எனப்படும் இரு அரேபிய முஸ்லிம் சகோதர மாலுமிகளின் கப்பல் நடுக்கடலில் சேதமாகி தண்ணீரில் மூழ்கியதால் அருகில் உள்ள தாடன் எனும் கடற்கரை நகருக்கு தப்பிச் சென்றனர். அந்த ஊரை சார்ந்தவர்கள் அவர்களை ஒரு முழு யானையின் வலிமையுடையவர்கள் என்று கூறினர். இதை கேட்ட தாடனின் மன்னன் இவர்களால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி இரு சகோதரர்களில் ஒருவரை தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது கொன்று விட்டான். இவரே புத்த சாம்ராஜ்ஜியத்தால் கொல்லப்பட்ட முதல் முஸ்லிம். மற்றொரு சகோதரர் பயத் தா தப்பி ஓடி பாகன் சாம்ராஜ்ஜியத்தின் அரசன் அனவ்ரஹ்தாவிடம் தஞ்சம் புகுந்து அரசனிடமே வேலை செய்தார். அவர் பொபா என்ற இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து ஷ்வே, பியின் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இரு மகன்களை பெற்றெடுத்தார்.
ஷ்வே,பியின் சகோதரர்களும் தங்கள் தந்தையின் வழி அனவ்ராஹ்தா மன்னரிடத்தில் பணி புரிந்தனர். பின்பு மன்னரின் போர்ப்படையில் போர் வீரர்களாக திகழ்ந்தனர். சீனா பர்மாவின் பாகன் சாம்ராஜ்ஜியத்தை தாக்க முற்படும் பொழுது இந்த சகோதரர்கள் பலம் வாய்ந்த சீன படையையே அஞ்ச வைத்து விரட்டி அடித்தனர். இருந்த போதிலும் ஷ்வே, பியின் சகோதரர்கள் புத்த கோயில் கட்டுவதற்கு உதவாததால் மதவெறிபிடித்த அனவ்ரஹதா மன்னன் இச்சகோதரர்கள் இருவரையும் கொன்று வீழ்த்தினான்.
இதற்கு பின்பும் பாகன் சாம்ராஜ்ஜியத்தின் போர்ப் படையில் வீரர்களாக அதிக அளவில் அம்மன்னர்கள் முஸ்லிம்களையே பணியமர்த்தினர். அப்போதைய சட்டத்தின்படி மன்னரின் இனத்தை சார்ந்த மற்றொருவன் மன்னரை கொன்று வீழ்த்தினால் அவனே மன்னன் எனும் சட்டம் இருந்தது. இதை கருத்தில் கொண்ட அரசர்கள் முஸ்லிம்களையே போர் படையின் தளபதிகளாகவும், படை வீரர்களாகவும் பணியில் அமர்த்தினர். இருந்த போதிலும் நீதியுடனும் விசுவாசத்துடனும் இருந்த முஸ்லிம்களை புத்த வழிபாடுகளில் ஈடுபடாத ஒரே காரணத்தால் புத்த மன்னர்கள் அவர்களுக்கு மரண தண்டனை அளித்தனர்.
16ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் அதிக அளவில் புத்த மன்னர்களிடத்தில் வேலை செய்ய தொடங்கினர். கி.பி. 1550-1589 வரை ஆண்ட பயின்ட் நாங் எனப்படும் அரசன் முஸ்லிம்கள் தங்கள் உணவிற்காக கால்நடைகளை ஹலால் முறையில் அறுப்பதை தடை செய்தான். மேலும், முஸ்லிம்களின் பண்டிகைகளான ஈதுல் அல்ஹா (ஹஜ் பெருநாள்), ஈதுல் ஃபித்ரா (நோன்பு பெருநாள்) ஆகியவற்றை கொண்டாடுவதற்கு தடை விதித்து புத்த மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை நிரூபித்தான். இவன் முஸ்லிம்களை கட்டாயமாக புத்த மதத்திற்கு மதம் மாற்றம் செய்யவும் உத்தரவிட்டான். மறுத்த முஸ்லிம்களுக்கு வழக்கம் போல் மரண தண்டனை வழங்கப்பட்டது.
முதல் முறையாக பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது 17ம் நூற்றாண்டில் தான். முகலாய மன்னரான ஷாஜஹானின் மகன்களான ஷாஹ் ஷூஜாவிற்கும், ஔரங்கசீப்பிற்கும் ஷாஜஹானின் மரணத்திற்கு பிறகு யார் அடுத்து நாட்டை கைப்பற்றுவது எனும் போட்டி நிலவிய போது இதில் ஔரங்கசீப்பிடம் தோற்றுப்போன ஷாஹ் ஷூஜா தன்னுடைய படைகளுடன் தற்போதைய பர்மாவின் அராகன் பகுதிக்குள் தஞ்சம் புகுந்தார். அப்போதைய அராகன் பகுதியின் புத்த அரசராக இருந்த சண்டதுடாமா (கி.பி. 1652-1687) ஷாஹ் ஷூஜா அராகன் பகுதியில் தன் படைகள் மற்றும் குடும்பத்துடன் குடியேற அனுமதித்தார். ஷாஹ் ஷூஜா ஹஜ்ஜுக்கு செல்வதற்கு அராகன் அரசனிடம் தன்னிடம் இருக்கும் வெள்ளி மற்றும் தங்கத்தை செலுத்தி கப்பல் வாங்குவதென முடிவெடுத்தார்.
ஆனால், சண்டதுடாமா எனும் அந்த அரசன் ஷாஹ் ஷூஜாவின் மகளை கப்பலுக்கு விலையாக கேட்டான், மேலும், ஷாஹ் ஷூஜாவின் செல்வத்தை பார்த்து பேராசை கொண்டான். இதை கேட்ட ஷாஹ் ஷூஜா தன்னுடைய படையை வைத்து அராகன் அரசனை அழிக்க முற்பட்டார். பின்பு தோற்றுப்போன அவரும் அவருடைய படை வீரர்களும் கொல்லப்பட்டனர். மேலும் பெண்களை சிறையில் அடைத்து அவர்களுக்கு உணவளிக்காமல் சாகும் வரை பட்டினி போடும் படி கட்டளையிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அராகன் பகுதிக்கு வந்த அனைத்து இந்திய முஸ்லிம்களையும் கொன்று குவித்தான் சண்டதுடாமா.
புத்த அரசர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளும் வன்முறைகளும் ஒவ்வொரு நூற்றாண்டும் அரங்கேறிக்கொண்டே இருந்தன. 18ம் நூற்றாண்டின் இறுதியில் போடவ்பயா எனும் புத்த அரசன் மையடு எனும் பகுதியை சேர்ந்த நான்கு பர்மா முஸ்லிம் இமாம்களை பன்றி இறைச்சி உண்ணும் படி வற்புறுத்தி அவர்கள் மறுத்த போது அவர்கள் நான்கு பேரையும் கொலைச் செய்து விட்டான்.
புத்த மன்னர்களின் சுமார் ஆயிரம் ஆண்டு ஆட்சியின் போது நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் இது ஒரு துளியாகவே இருக்கக்கூடும். வரலாற்றில் பதிவு செய்யப்படாத பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு இருக்கலாம். இந்த புத்த மன்னர்களின் ஆட்சியின் போது தான் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று புத்த சாமியார்கள் அஹிம்சையை போதித்து பல்வேறு மக்களை அழைத்தனர். ஒரு பக்கம் புத்தர்கள் அமைதியானவர்கள், ஒரு எறும்பைக் கூட கொல்வதற்கு தயங்குபவர்கள் என்று உலக மக்கள் நினைத்துக் கொண்டிருக்க புத்த மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பர்மா ஒரு உதாரணம்.
ஆங்கிலேய ஆட்சியில் பர்மாவின் முஸ்லிம்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொன்பாவுங் வம்சம் பர்மாவை ஆண்டு கொண்டிருந்த போது தன்னுடைய நிலப்பரப்பை விரிவுப்படுத்த முடிவு செய்தது . இந்தியாவின் அஸ்ஸாமை ஒட்டியுள்ள அராகன் பகுதியை தங்களுடன் இணைக்க முடிவு செய்தனர். அஸ்ஸாம் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்ததால் அஸ்ஸாமிற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று நினைத்தார்கள் ஆங்கிலேயர்கள். இது முதல் ஆங்கிலோ-பர்மா போருக்கு (1823-1826) வித்திட்டது. இந்த போரில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் இந்தியாவுடன் அராகன் பகுதியை இணைத்தனர். அராகன் பகுதி ஆங்கிலேயர்களிடம் வந்தவுடன் ஏராளமான வங்காளத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை அவர்கள் அராகன் பகுதியில் பணியமர்த்தினர். அவ்வாறு அராகன் பகுதியில் வந்தேறியவர்கள் தான் இன்று ராக்கினே மாகாணத்தில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள், இவர்கள் பர்மாவின் சிறுபான்மை முஸ்லிம்களுள் ஒரு பெரும் பகுதியாக இன்று வரை இருக்கின்றனர்.
பின்னர் திருப்தி அடையாத ஆங்கிலேயர்கள் தெற்கு பர்மாவில் உள்ள பர்மா தேக்குகளையும், ரப்பர் மரங்களையும் அடைய வேண்டும் என நினைத்து 1852ல் இரண்டாம் ஆங்கிலோ-பர்மா போரும், 1885ல் மூன்றாம் ஆங்கிலோ-பர்மா போரையும் நிகழ்த்தி முழு பர்மாவையும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். 1885 வரை மியான்மர் எனும் பெயரைக் கொண்டிருந்த அந்நாட்டை ஆங்கிலேயர்கள் அப்போது பர்மா என்று மாற்றினர். இப்பொழுது மீண்டும் மியான்மர் என மாற்றப்பட்டு விட்டது. முழு பர்மாவையும் அடைந்த உடன் பர்மாவை பிரிட்டிஷ் இந்தியாவின் உடன் ஒரு மாகாணமாக இணைத்தது ஆங்கிலேய அரசு.
பிரிட்டிஷ் காலாணியாக பர்மா இருந்த போது கூலி வேலைக்காரர்களாகவும், சிறு தொழில் செய்வதற்கும் இந்திய முஸ்லிம்கள் பர்மாவில் குடியேற தொடங்கினர். 1931ம் ஆண்டில் பர்மாவின் தலைநகரம் ரங்கூனில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்தியர்களாக இருந்தனர். அதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். ஆரம்ப காலகட்டங்களில் முஸ்லிம்களும், பௌத்தர்களும் ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்திருந்தாலும் அது நீடிக்கவில்லை.
1930 இந்தியர் எதிர்ப்பு கலவரம்
அதன் பிறகு அடுத்த நாள் வேலைக்கு வந்த அனைத்து பர்மா மக்களிடமும் ஆங்கிலேயர்கள் உங்களின் தேவை இனிமேல் எங்களுக்கு இல்லை என கூறினர். இதனைக் கேட்ட நூற்றுக்கணக்கான பர்மா பௌத்தர்கள் அனைவரும் இந்தியர்களுக்கு எதிராக வெறியாட்டத்தை துவங்கினர். இது மிகப்பெரிய இந்தியர் எதிர்ப்பு கலவரமாகவும், இந்தியர்களுள் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாக இருக்கும் காரணத்தால் இது பின்பு முஸ்லிம் எதிர்ப்பு கலவரமாகவும் மாறியது.
கலவரம் துவங்கி அரை மணி நேரத்திற்குள் இருநூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் (இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டாலும் பெரும்பான்மை முஸ்லிம்கள்) படுகொலை செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு ஆற்றில் வீசப்பட்டனர். ஐந்திற்கு மேற்பட்டோர் ஒன்று கூடி ஆயுதங்களை கீழே போட மறுத்தால் காவல் துறைக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டது.
இருப்பினும், இரு நாட்களில் கலவரம் பர்மா முழுவதும் பரவி நாடு முழுவதும் அனைத்து பகுதியில் வாழும் முஸ்லிம்களும், இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை துல்லியமாக அறிய இயலவில்லை.
இந்திய முஸ்லிம்களும் பூர்வீக பர்மாவின் முஸ்லிம்களும் வேறுபட்டவர்களாக இருந்த போதிலும், இந்திய முஸ்லிம்கள், பர்மா முஸ்லிம்கள், இந்திய இந்துக்கள் ஆகிய அனைவரையும் பௌத்தர்கள் ஒன்றாக ‘கலா’ என்று அழைத்து கலவரங்களின் போது இவர்கள் அனைவரையும் ஒன்றாகவே கருதி அழித்தனர்.
அகதிகளை விட மிக மோசமான நிலையில் வாழும் பர்மா முஸ்லிம்கள்
1938 முஸ்லிம் எதிர்ப்பு கலவரம்
1938ஆம் ஆண்டு ஒரு முஸ்லிம் எதிர்ப்பு கலவரம் அரங்கேறியது. இது பெயரிலும் செயலிலும் முஸ்லிம் எதிர்ப்பு கலவரமாக காட்டப்பட்டாலும் அவர்கள் உண்மையில் எதிர்த்துக் கொண்டிருந்தது ஆங்கிலேயர்களை. ஆங்கிலேயர்களுடன் நேரடியாக மோத முடியாத பர்மாவின் புத்தர்கள் இக்கலவரத்தில் முஸ்லிம்களை ஒரு விளையாட்டுப் பொருளாக பயன்படுத்திக் கொண்டனர். வலிமை மிகுந்த ஆங்கிலேயர்களை எளிதில் விரட்ட முடியாது என்பதை அறிந்த புத்தர்கள் முஸ்லிம்களை துரத்தினால் தனி நாடு கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்தனர். உள்நாட்டு ஊடகங்களும் செய்தித்தாள்களும் தினந்தோறும் முஸ்லிம்களுக்கு எதிராக மக்களிடத்தில் கிளர்ச்சியை உண்டு படுத்தும் வண்ணம் செய்திகளை வெளியிட்டது. இந்த கலவரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் பொருளாதாரத்தையும், வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் இழந்தனர்.
‘பர்மா’ பர்மா மக்களுக்கு மட்டும் பிரச்சாரம்!
பர்மா பர்மா மக்களுக்கு மட்டுமே எனும் பிரச்சாரத்தை துவங்கி பர்மாவின் புத்தர்கள் முஸ்லிம்கள் வணிகம் செய்யும் ‘சுர்தி’ பஜார் எனும் கடைத் தெருவை நோக்கி சென்றனர். புத்தர்கள் வன்முறையில் ஈடுபட முயன்ற பொழுது பர்மா காவல் துறையில் பணிபுரியும் இந்திய போலீஸார் சிலர் கலவரத்தை கட்டுப்படுத்தும் பொழுது 3 புத்த சாமியார்கள் காயமடைந்தனர். பர்மாவின் செய்தித்தாள்கள் இந்திய காவல்துறையினர் புத்த சாமியார்களை தாக்குவது போல் படங்களை தங்கள் செய்தித்தாள்களில் வெளியிட்டு கலவரம் மேலும் பரவுவதற்கு வித்திட்டனர். இக்கலவரத்தில் பர்மா முழுவதும் முஸ்லிம்களின் கடைகள், உடமைகள், வீடுகள், பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டு எரிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்தனர். இக்கலவரம் ரங்கூனிலிருந்து பர்மா முழுவதும் சில தினங்களில் பரவி சுமார் 113 பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டன.
பர்மாவில் புத்தர்கள் நிர்வகித்துவந்த செய்தித்தாள்களே ஆதிக்கம் செலுத்தியதால் முஸ்லிம்களின் பாதிப்பு பற்றியோ, உயிர் சேதம், பொருள் சேதம் பற்றிய எந்த விதமான புள்ளி விவரங்களும் வெளிவரவில்லை. பர்மாவில் முஸ்லிம்கள் சந்தித்த மோசமான கலவரங்களில் இதுவும் ஒன்றாகும்.
1938 இந்தியாவிலிருந்து பர்மா பிரிவு
பர்மாவில் மேலும் மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து லண்டனில் நடந்த இந்தியாவை பற்றியான வட்ட மேஜை மாநாட்டில் (Round Table Conference) பர்மாவில் முஸ்லிம்களுக்கு முழு குடியுரிமை கொடுப்பது, வழிபாட்டு சுதந்திரம், சிறுபான்மையினர் தங்கள் கலாச்சாரத்தை பின்பற்றும் சுதந்திரம், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை பராமரிக்க முஸ்லிம்களுக்கு பொது வருவாயில் பங்கு இறுதியாக இந்தியாவிலிருந்து பிரித்து பர்மாவை பிரிட்டீஷ் காலனியின் தனி நாடாக நிர்வகிப்பது ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கப்பட்டது. இறுதி திட்டமான பர்மாவை தனி நாடாக பிரிப்பது மட்டுமே கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1938-ஆம் ஆண்டு பர்மா இந்தியாவின் ஒரு மாகாணமாக செயல்பட்டுக் கொண்டிருந்ததிலிருந்து விலகி தனி நாடாக செயல்படத் தொடங்கியது. இதன் விளைவாக பர்மாவில் குடியேறிய ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பினர். ஒரே நேரத்தில் அனைத்து இந்திய முஸ்லிம்களும் ரங்கூனை விட்டு வெளியேறியதால் அங்கு வணிகத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் பங்கு பெற்ற காரணத்தினால் கடைத் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பிரிவுக்கு பிறகு பர்மாவின் பூர்வீக முஸ்லிம்களும், அரகன்(ரக்கானே) மாகாணத்தின் ரோஹிங்கிய முஸ்லிம்களும் மற்றும் சிறிதளவில் இருக்கும் சீன மலாய முஸ்லிம்களும் பர்மாவில் தொடர்ந்து இருக்கத்தொடங்கினர்.
இரண்டாம் உலகப் போர் பர்மா முஸ்லிம்களின் பாதிப்பு
பர்மா தனி நாடாக பிரித்தெடுக்கப்பட்டதற்கு பிறகு தொடங்கிய இரண்டாம் உலகப்போர் பர்மாவின் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேயர்களின் காலனி நாடுகளை ஜப்பான் கைப்பற்ற முயன்றது. அப்பொழுது ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஜப்பானியர்களால் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இரண்டாம் உலகப்போரின் காலத்தில் ஜப்பானியர்களால் நூற்றுக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அக்காலத்தில் ஜப்பானியர்களின் வேதனைகளை தாங்க முடியாமல் சுமார் 22,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மாவின் எல்லையை கடந்து பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள பகுதிக்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது. 1942 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று மின்பியா மற்றும் மரோஹாங் நகரங்களில் வாழ்ந்த சுமார் 5000 முஸ்லிம்களை ராக்கினே மாகாண தேசியவாதிகளும் ஜப்பானியர்களும் கொன்று குவித்தனர். பர்மாவில் எவ்வித கலவரமாக இருந்தாலும் எந்த நாடு பர்மாவை கைப்பற்ற முயன்றாலும் அதில் பாதிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுபவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தனர்.
சுதந்திர போராட்டத்தின் உச்சக்கட்டமும் பர்மாவின் சுதந்திரமும்
1945 களில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருக்கும் பொழுது முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாடு கருதி சில இயக்கங்கள் தொடங்கப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்கது ஆஇ எனப்படும் பர்மீஸ் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜெனரல் ஆங்சேன் என்பவரால் துவங்கப்பட்ட AFPFL எனப்படும் அன்டி ஃபாஸிஸ்ட் பீபுல்ஸ் ஃப்ரீடம் பார்ட்டி (பாசிஸத்திற்கு எதிரான மக்கள் சுதந்திரக் கட்சி) ஆகிய இரு இயக்கங்களும் துவக்கத்தில் ஒன்றாகவே செயல்பட்டன. யு ரசாக் எனப்படுபவர் பர்மீஸ் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக 1945ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது ஆMஇயை AFPFL உடன் இணைத்தார். பின்பு அவர் பர்மாவின் கல்வித்துறை அமைச்சரானார்.
அப்பொழுது AFPFL துவங்கிய ஜெனரல் ஆங் சேன் பர்மாவின் பிரதமராக இருந்தார். பிற உள்நாட்டு அரசியல்வாதிகளின் சதியால் ஜெனரல் ஆங்சேனும் யு ரசாக்கும் ஒன்றாக கொலை செய்யப்பட்டனர். அக்காலத்தில் பர்மாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற முக்கியமான முஸ்லிமாகவும், முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கு பாடுபட்டவராகவும் யு ரசாக் விளங்கினார். காலப்போக்கில் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள மற்ற பிரிட்டிஷ் காலணி நாடுகளுக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு 1948ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி பர்மா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரத்திற்கு பிறகு பர்மா எனும் பெயர் மியான்மர் என மாற்றப்பட்டது.
அடுத்து யு ராஷித் என்பவர் AFPFLன் முக்கிய பொறுப்பில் முஸ்லிம்கள் சார்பில் இருந்திருந்தாலும் கட்சியின் வளர்ச்சிக்காகவும் நாட்டின் சூழ்நிலைகளை கருதி முஸ்லிம்களின் உரிமைகள் சிலவற்றை அவர் விட்டுக்கொடுத்ததால் முஸ்லிம்களிடத்தில் அவருக்கு நல்ல வரவேற்வு கிடைக்கவில்லை. பர்மாவின் சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு பிறகு யு னு என்பவர் AFPFLன் சார்பாக பிரதமராக பதவியேற்று சில நாட்களிலேயே பர்மீஸ் முஸ்லிம் காங்கிரஸை AFPFL லிருந்து விலகிக்கொள்ள வற்புறுத்தினார்.
பின்பு சிறுபான்மை மக்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் யூ னு புத்த மதத்தை பர்மாவின் தேசிய மதமாக்கினார்-நன்றி வட்ஸ்அப் அனுப்புனர்.

ஷஃபான் மாத நோன்பு

ஷஃபான் மாதத்தை பாலாக்கும் பராத் இரவும் பித்அத் சடங்குகளும். (சாபித் ஷரயி) ...................................................................... இஸ்லாம் ஆதாரபூர்வமாக அடையாளப்படுத்தும் தினங்ளை சிறப்பிப்பது நம் சுன்னாவாகும் உதாரணமாக முஹர்ரம் 09,10, அரபா 09ம் தினம், திங்கள் வியாழன் சுன்னத்தான நோன்பு, நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்..... இப்படி பல தினங்கள் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் மூலம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது போன்றே நாம் இருந்துகொண்டிருக்கும் ஷஃபான் மாதம் குறித்து வரக்கூடிய ஹதீஸ்களை எடுத்து நோக்கினால் புஹாரி முஸ்லிம் உட்பட பல கிரந்தங்களில் இம்மாதமானது நபிகளார் ரமழான் மாதத்திற்க்கு அடுத்த படியாக அதிகமாக நோன்பு நோற்ற மாதமாகவும், ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சென்ற ரமழானில் தவரவிடப்பட்ட நோன்புகளை கழாச்செய்யும் மாதமாகவும், அதிகமாக அமல்களில் ஈடுபட்டு எதிர்நோக்கவிருக்கும் ரமழானுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் மாதமாகவுமே திகழ்ந்துள்ளது. அதுவல்லாமல் லய்லதுல் கத்ர் இரவு போன்று ஷஃபான் மாதத்தின் 15ம் நாள் பராத் இரவு என்று வாசகங்களுடன் இடம் பெறும் எந்த குர்ஆன் வசனத்தையும் ஹதீஸ்களையும் காணமுடியாது. மாறாக ஷஃபானின் 15ம் இரவு அல்லாஹ் அடிவானத்திற்க்கு இறங்குகிறான் என்றும், கல்புகூட்டதாரின் ஆடுகளின் உரோமமளவிற்க்கு நரவாசிகளுக்கு விடுதலை வழங்குகிறான் என்றும், அந்நாளில் பகல் முழுக்க நோன்பு வையுங்கள் இரவு முழுக்க இபாதத்தில் ஈடுபடுங்கள் என்றும் பல ஹதீஸ்கள் இப்னுமாஜா, பய்ஹகி, திர்மதி, மிஸ்காத், ஸுஃபுல் ஈமான், தாரகுத்னி போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. இந்த அனைத்து ஹதீஸ்களையும் ஆய்வுக்குட்படுத்தினால் அனைத்துமே பலஹீனமான அறிவிப்பாளர் வரிசைகளைக் கொண்ட ஹதீஸ்களாகும். அதில் இடம் பெறும் அறிவிப்பாளர்களை ஹதீஸ்களை இமாம்களான அபூஜஹ்பர் அல் உகைலி, அபூஹாதம், அல்பானி, அஹ்மத் இப்னு அப்தில்லாஹ் அல் இஜ்லி, இன்னும் அந்த ஹதீஸ் கிரந்தங்களுக்கு தஹ்கீக் எழுதிய பல இமாம்கள் அவ் அறிவிப்பாளர்கள் முதல்லிஸ்கள் என்றும், முர்ஸில்கள் என்றும் பல குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக நிறுவி இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலயீனமானவைகள் என நிறூபித்துள்ளனர். எனவே இந்த பராத் இரவு என்பது நபிகளாரோ எந்த ஸஹாபாக்களோ அனுஸ்டித்த இரவு கிடையாது. பின் வந்தோரால் ஷீஆக்களால் திட்டமிடப்பட்டு பித்அத்ஆக நுழைவிக்கப்பட்ட இரவாகும்... இதை அறியாத எமது சமூகம் நன்மையென நினைத்து அன்றைய நாளை பாவத்தில் ஈடுபடும் நாளாக அமைத்துக் கொள்கின்றனர் எனவே இந்த பித்அத்தைவிட்டும் தவிர்ந்து எதிர்வரும் ரமழானிற்க்காக எம்மை நாம் தயார்படுத்துவோம்.... 

ஹதீஸ்

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

''உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.

புகாரி (3456)

Saturday, February 21, 2015

  إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ  صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ 
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7