Thursday, September 26, 2013

சூரை மீன் ஒவ்வாமையால் கிண்ணியாவிலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

சூரைமீன் ஒவ்வாமை காரணாமாக சுகயீனமுற்ற இருவர் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
கிண்ணியா, முதூர் பகுதிகளில் மலிவு விலையில் அதிகளவு விற்பனையாகும் சூரைமீன்களை உட்கொண்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவன்னமுள்ளது.
இதுவரை முதூர் வைத்தியசாலையில் 42 பேரும், கிண்ணியா தளவைத்தியசாலையில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெற்று சென்றுள்ளதாகவும், சூரைமீனின் வழமையான ஒவ்வாமைத்தன்மையே இவர்களின் சுகயீனத்திற்கு காரணமாகவிருக்கலாம் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: